எனது முன் பனிக் காலங்கள்.
Published by மலைநாடான் on Wednesday, January 03, 2007 at 2:08 PMதிருவெம்பாவை பூசையும்
திருப்பள்ளியெழுச்சிப் பஜனையுமாய்
சுகமான ஒரு முன்பனிக்காலம்
எழுபதுகளில் எனக்கிருந்தது.
பின்வந்த எண்பதுகளில்
காவலும் கடமையுமாய்
கடலிலும் கரையிலும்
என் முன்பனிக்காலம் கழிந்தது.
தொன்னூறுகளின் தொடக்கத்திலோ
நெஞ்சு கனக்கும் நினைவுகளோடு
வெண்பனியுறையும் துருவக்
கரையின் தெருக்களில் நான்..
நன்றி - ' திசை'
4 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
காவலும் கடமையுமாய்
கடலிலும் கரையிலும்
என் முன்பனிக்காலம் கழிந்தது.//
ஆகா..மலை நாடன்...... என்ன சென்றிக்கு நின்றீங்களா..
சும்மா பகிடிக்கு கண்டுக்காதையுங்க
திருப்பள்ளியெழுச்சிப் பஜனையுமாய்
சுகமான ஒரு முன்பனிக்காலம்
எழுபதுகளில் எனக்கிருந்தது
மலைநாடர்!
காலங்களில் இந்த மார்கழித் திருவெம்பாக் காலம் ஓர் அழகான காலம் தான்!!!காலைச் சங்கொலி;வீதிதோறும் பஜனை;ஆலயமணி ஓசை...பின்பு சுண்டல்..;மறக்கமுடியாத காலம். ஏனையவை மறக்கவிரும்புபவை!!
யோகன் பாரிஸ்
நான் இதை எழுதேக்க நினைச்சனானன். நிச்சயம் இந்த வரியளப்பிடிச்சுக்கொண்டு, இப்பிடிக் கேட்டுக் கொண்டு வருவியள என்டு. அதே மாதிரி வந்திட்டியள். :)))
இது எனக்குத் தெரிந்தவர்களின் அனுபவமாகவும் இருக்கலாம் அல்லவா? :)
ஆனால் நான் எதையும் மறக்கவிரும்பவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவம்.